ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி பரிசுத்தொகுப்பு.. உரிய நேரத்தில் வராததால் கண்டனம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்தது. தற்போது பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இதுவரை பரிசுத்தொகுப்பு வந்து சேரவில்லை என்று பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
பரிசுத்தொகுப்பு:
இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ்தொகை, அகவிலைப்படி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதே போல தனியார் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை ஊழியர்களுக்கு அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏழை எளிய மக்களும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட்ட வேண்டும் என்ற நோக்குடன் மஹாராஷ்டிரா மாநில அரசு பரிசுத்தொகுப்பை அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அம்மாநில ரேஷன் அட்டைதாரரகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இதுவரை தீபாவளி பரிசுத்தொகுப்பு மக்களுக்கு போய் சேரவில்லை. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு பாடங்களில் கட் ஆப் மதிப்பெண்கள் குறைப்பு – மாநில அரசு முடிவு!
Exams Daily Mobile App Download
இதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அம்மாநில முதல்வரின் புகைப்படம் அச்சிடப்பட்டு தான் பரிசுத்தொகுப்பை வழங்க வேண்டும் என்று அரசு கூறியதாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனையை சரி செய்து விரைவில் தீபாவளி பரிசுத்தொகுப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.