தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கமே அதிகமாகவே இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெயில்:
தமிழகத்தில் தற்போது பருவமழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. காலை வேளையில் லேசான பனிமூட்டம் தென்பட்டாலும் அடுத்தடுத்து சில மணி நேரத்திலேயே கூடுதல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், அடுத்த ஒரு வாரம் வரையிலும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. ஆனால், பிப்.10 ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
PGCIL நிறுவன வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.218200/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. சென்னையை பொருத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படும் எனவும், காலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும் எனவும், மதியவேளையில் கூடுதல் வெயில் கொளுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலில் புயல் சின்னம் எதுவும் உருவாகாத நிலையில் மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் எனவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.