9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ஹரியானா மாநிலத்தில் கொரோனா வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் காரணமாக ஹரியானா மாநிலத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டுமாக செயல்பட உள்ளன. அதாவது ஹரியானா மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் தீவிரமடைந்து வந்த காரணத்தால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. தவிர மே மாதம் 31 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன.
TN Job “FB Group” Join Now
தேவையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின் படி வகுப்புகளை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பள்ளிகள் செயல்படுவதற்கான நிலையான இயக்க நடைமுறைகளையும் (SOP) அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்து பள்ளிகளுக்கும், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு குறித்து அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் ஹரியானா கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு செம அறிவிப்பு – வருவாய் ஈட்டும் வசதி!!
மேலும் பள்ளிகளில் உள்ள இருக்கைகள், அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு விவரங்களையும் மாநில அரசு கோரியுள்ளது. ஹரியானா கல்வி இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, பள்ளிகளில் ஒரு இருக்கையில் ஒரு மாணவர் அமர்வதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர முகக்கவசம், சமூக இடைவெளி, கை சுத்திகரிப்பு போன்ற பிற கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றப்படுவதையும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.