டிசம்பர் 1 முதல் பள்ளிகளில் நேர மாற்றம் – மாநில அரசு புதிய அறிவிப்பு!
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் வருகிற நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹரியானா பள்ளிகள்:
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் குளிர்கால அமர்வுக்கான புதிய நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரே ஷிப்டில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளுக்கு 09.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் எனவும், இரட்டை ஷிப்டில் வகுப்பு எடுக்கும் பள்ளிகளுக்கு, முதல் ஷிப்ட் காலை 07:55 முதல் மதியம் 12:30 வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மதியம் 12:40 முதல் மாலை 05:15 வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஹரியானாவில் உள்ள பள்ளிகளில் விரைவில் இரட்டை மேசைகள் வாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 22 மாவட்டங்களிலும் உள்ள தொடக்க, மேல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சுமார் 1.41 லட்சம் இரட்டை மேசைகள் வாங்கப்பட இருப்பதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.95 கோடி செலவிடப்படும் என ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.
நடத்துனர்களை எச்சரிக்கும் போக்குவரத்து கழகம்.. இதை செய்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்!
Exams Daily Mobile App Download
தொடர்ந்து பேசிய அவர் இந்த மேசைகள் 2023 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முதல் கட்டமாக அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் சொன்ன தகவலின் படி ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 65,501 மேசைகளும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 36,168 மேசைகளும்,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 39,208 மேசைகளும் வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.