நடத்துனர்களை எச்சரிக்கும் போக்குவரத்து கழகம்.. இதை செய்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்!
தமிழகத்தில் அவ்வப்போது பல்வேறு இடங்களில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பொதுமக்களிடமிருந்து பேருந்து மற்றும் வியாபாரிகள் முதற்கொண்டு வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் பேருந்து நடத்துனர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நடத்துனர்
இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் வெளியிடப்பட்டு தற்போது புழக்கத்தில் உள்ளது. இந்த நாணயங்களை பொதுமக்கள் செல்லாது என கருதி பல்வேறு இடங்களில் வாங்க மறுத்து வந்தனர். தற்போது இந்த கருத்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பரவி வருகிறது. மேலும் பொதுமக்கள் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் அல்லது பேருந்துகளில் நடத்துனர்களிடம் கொடுத்தாலோ வாங்க மறுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இதில் குறிப்பாக அரசு பேருந்துகளில் பயண சீட்டுக்காக ரூ.10 அல்லது ரூ.20 நாணயங்களை பொதுமக்கள் கொடுக்கும் பொழுது இதனை நடத்துனர்கள் வாங்க மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகம் அனைத்து பேருந்து நடத்துனர்களுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து நடத்துனர்கள் மறுக்காமல் வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் தற்போது எப்படி உள்ளார்? மருத்துவர்களின் அறிவுரை இதுதான்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் பொது மக்களிடம் இருந்து ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் எந்த காரணத்துக்காகவும் பொதுமக்களிடம் இருந்து ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுக்கக்கூடாது எனவும் அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.
எங்கள் ஊரில்(மேட்டூர் அணை) வங்கிகளிலேயே வாங்குவது இல்லை..