சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ் – உயரும் வட்டி! வெளியான தகவல்!
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் சிட்டிசன்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
வட்டி விகிதம் உயர்வு:
மக்கள் பலர் தங்களின் வயதான காலத்தில் பயன் பெற வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். அதிகமான தொகையில் ஃபிக்சட் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறிப்பிட்ட வட்டி விகிதம் அறிவித்து அதற்கான தொகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். மூப்பு காலத்தில் ஓய்வூதியதரர்களுக்கு இந்த தொகை பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் சிட்டிசன்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது.
பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சீனியர் சிட்டிசன்கள் எனவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் தான் பயனுள்ளதாக இருக்கிறது. அதனால் பலர் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலீடு செய்துள்ள சீனியர் சிட்டிசன்கள், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஒரே சீருடை? உச்ச நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!
Exams Daily Mobile App Download
அதன் படி 2 கோடி ரூபாய்க்குட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 0.50% வரை வட்டி விகிதம் எனவும், சீனியர் சிட்டிசன்களுக்கு 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு வட்டி விகிதம் 0.50% வரையிலும், 5 ஆண்டுகளுக்கு மேலான திட்டங்களுக்கு 0.80% வரையிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமாக 6.60% வட்டியும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிகபட்சமாக 6.90% வட்டியும் கிடைக்கும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்