தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் வெளியிட்ட உத்தரவு!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாகுதலை கண்டித்து நாடு முழுவதும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவத் தொடங்கியது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகளாக திரையரங்குகள், உணவகங்கள், பேருந்து போன்றவற்றில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அரசின் மேற்கண்ட தடுப்பு பணிகளின் விளைவாக தொற்று பாதிப்பு எண்ணிக்கைகள் தற்போது இறங்கு முகத்தில் உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு – பீதியில் பொதுமக்கள்! உண்மை நிலவரம் என்ன?
அதனால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளும் கூட தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. மூன்றாம் அலைக்கு பின்னர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. தற்போது மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வண்ணம் 12ம் வகுப்புகளுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கண்டித்து பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்த கோரியும் தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். 10 சதவீதம் பேருந்துகள் கூட இயக்கப்படாததால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.