பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் (ஏப்.03) அரை நாள் மட்டுமே வகுப்புகள்!
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இன்று (ஏப்ரல்.03) முதல் இந்த மாநிலத்தில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அரை நாள் பள்ளிகள்:
இந்தியாவில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் வெப்ப அலை வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள் !
மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இந்த வெப்பத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இன்று (ஏப்ரல்.03) முதல் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 1) முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே வகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோடை நேரத்தில் திறந்த வெளியில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download