புதிய நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா வழங்கும் பணிகள் தொடக்கம் – அமெரிக்க அரசு!
அமெரிக்காவில் டிரம்ப் அரசு அறிவித்திருந்த ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2022 ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா வழங்க தேவையான பணிகளை அமெரிக்க அரசு துவங்கி உள்ளது.
ஹெச்1பி விசா:
அமெரிக்காவில் புதிய அதிபராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஜோ பைடன் அரசு முந்தைய அரசு விதித்த பல விதிமுறைகளை மாற்றி வருகிறது. ஆனால் இந்தியர்கள் வேலை அல்லது படிப்புக்காக அமெரிக்கா செல்ல வழங்கப்படும் ஹெச்1பி விசா மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படாமல் இருந்தது. இதனால் கோடிக்கணக்கில் இந்திய ஐடி ஊழியர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் பைடன் அரசு எவ்விதமான புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதிக்காமல் பழைய லாட்டரி முறையில் ஹெச்1பி விசாவை வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tokyo Olympics: பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் – இந்தியாவிற்கு அடுத்த பதக்கம்?
இதன் படி ஜூன் மாதம் அமெரிக்க அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஹெச்1பி விசா விண்ணப்பத்தை தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் இந்தியர்கள் உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் இருந்து 3,08,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தை லாட்டரி முறையில் முதற்கட்ட தேர்வுகளை கடந்த வாரம் குடியேற்ற அமைப்பு செய்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஆய்வுகளை செய்ய துவங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த வருடத்தை விடவும் 12.5 சதவீத கூடுதல் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், முதற்கட்டமாக குடியேற்ற அமைப்பு 85,000 விண்ணப்பங்களை தேர்வு செய்துள்ளது. அடுத்த கட்ட ஆய்வில் விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரர் 2022 இல் ஹெச்1பி விசா பெறுவார். அமெரிக்க குடிவரவு மற்றும் குடியுரிமை சேவை அமைப்பு அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாக கொண்டு இயங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. இந்த விசா பெற உலக நாடுகளை விட இந்தியர்கள் தான் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் பெரும் பயனடைவார்கள்.