அரசு ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட விடுப்பு பணிக்காலமாக மாற்றம் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை காலத்தை பணிக்காலமாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பணிக்காலம்
நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதில் அத்தியாவசியமான துறைகளை தவிர்த்து மற்ற அனைத்து துறைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. இதேபோன்று தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தது. அதன்படி தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 10ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் ஆரம்பமாகும் கோடை வெயில் – அதிகரிக்கும் வெப்பநிலை.. இன்றைய வானிலை அறிக்கை!
தற்போது இந்த விடுமுறை நாட்களை சிறப்பு விடுப்பாக மாற்றி பணிக்காலமாக கருதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அரசாணையில், அரசு ஊழியர்கள் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பது அல்லது அந்த ஊழியரின் குடும்ப உறுப்பினர் அல்லது ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்திருந்தால் சிறப்பு விடுப்பாக கருதப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Follow our Instagram for more Latest Updates
இதேபோன்று பெண் அரசு ஊழியர்கள் கர்ப்பமாக இருந்தால் அவர்களுக்கு சிறப்பு விடுமுறை என கருதி பணிக்காலமாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமை செயலக பணியாளர்களில் பாலூட்டும் அலுவலர்கள், கர்ப்பிணி பெண்கள் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்ட அலுவலர்கள் என அனைவருக்கும் விடுமுறை தினமாக வழங்குவது குறித்து அந்தந்த துறை செயலாளர்கள் முடிவு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download