அகவிலைப்படி 8% உயர்வு… அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி – விரைவில் நிலுவைத்தொகையும் கிடைக்கும்!
குஜராத் மாநிலத்தில் 7 – வது ஊதிய குழு பரிந்துரையின் படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 8% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு நடப்பு ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி அறிவித்தது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 42% ஆக அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது குஜராத் மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 8% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
இனி RTO அலுவலகத்திற்கு நேரில் சென்று அலைய தேவையில்லை – டிஜிட்டல் சேவைகள் அறிமுகம்!
இதில் 4% அகவிலைப்படி ஜூலை 2022 1ம் தேதியிட்டும், 4% ஜூலை 1, 2023 தேதியின் படி கணக்கிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஒரு ஆண்டுக்கு அரசுக்கு ரூ.4,516 கோடி கூடுதல் சுமை ஏற்படும்.
Follow our Instagram for more Latest Updates
இதன் வாயிலாக சுமார் 9.38 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படி நிலுவைத்தொகை 3 தவணைகளில் ஊதியத்துடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download