தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிப்பு பணி!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் பணியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்த காரணத்தால் மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மதிப்பீடு முறையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 11 வரை கோவில் மூடல், பக்தர்கள் தரிசனம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு அரசு முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 50 சதவீத மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரும் வகையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க வகுப்பு வாரியாக இடைவேளை நேரங்கள் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதி கிடையாது. மேலும் மாணவர்கள் தினமும் தெர்மல் கருவி மூலம் சோதிக்கப்படுவார்கள். கட்டாயம் மாணவர்களும், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பள்ளிகள் திறக்கும் முன் நிர்வாகத்தினர் பள்ளி வளாகங்களை தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் பேணும் வகையில் ஆசிரியர்கள் சிறந்த அறிவுரைகளையும், விளையாட்டு பயிற்சிகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.