ஆகஸ்ட் 11 வரை கோவில் மூடல், பக்தர்கள் தரிசனம் ரத்து – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கிலும் தற்போது நோய்த்தொற்று பரவல் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. ஆங்காங்கே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தரிசனம் ரத்து:
கொரோனா 2ம் அலையின் தீவிர தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நோய் தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைந்து உள்ளதால் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் மீண்டும் நோய்த்தொற்று பரவும் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதித்ததோடு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகமானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலினை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு பொதுமக்கள் கூடுவது தடுக்கப்பட்டது. இந்த தடை முடிந்து திறக்கப்பட கோவிலில் நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.
TN Job “FB Group” Join Now
கோவில்கள் மற்றும் திருவிழாக்களில் பொதுமக்கள் கூடுவதை தடுப்பதற்காக ஆடிப்பூர திருவிழாவின் நிறைவு நாளான இன்றும், நாளையும் 2 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு கோவில் நடை சாத்தப்படுவதாகவும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. கோவிலில் வழக்கமான பூஜை நடைபெறும் நிலையில் தீ மிதித்தல் போன்ற விழாக்கள் நடைபெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.