அரசு ஊழியர்களுக்கான உத்திரவாத ஓய்வூதிய திட்டம் – அரசாணை வெளியீடு!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான உத்திரவாத ஓய்வூதிய திட்டத்தின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உத்திரவாத ஓய்வூதியம்:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு தனது ஊழியர்களுக்கான புதிய உத்தரவாத ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த உத்தரவாத ஓய்வூதிய திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆண் குழந்தைகளுக்கான அருமையான சேமிப்பு திட்டம் – 8.5% வட்டி!
செப்டம்பர் 1, 2004 அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். மேலும் அடிப்படை ஊதியத்தில் 50% கணக்கில் கொள்ளப்பட்டு மாதாந்திர உத்திரவாத ஓய்வூதியத்தை ஊழியர்கள் பெறுவார்கள். மேலும் இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் நபர் இறந்தால் அவரது மனைவிக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் உத்திரவாத ஓய்வூதியத்தில் 60% வாழ்க்கை துணைக்கு வழங்கப்படும்.