தமிழகத்தில் மார்ச் மாதம் ரூ.7,579 கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மார்ச் மாதம் ரூ.7,579 கோடி ஜிஎஸ்டி வசூல் - மத்திய அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் மார்ச் மாதம் ரூ.7,579 கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வரி மூலம் சுமார் ரூ.7,579 கோடி வசூலாகியுள்ளதாம். இதனை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 23% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி:

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் அனைத்து வகையான தொழில்களும் முடக்கப்பட்டது. இதனால் பலர் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்தனர். அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்தது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தது. இதனால் நாட்டில் சிறிதளவில் தொழில்கள் துவங்க ஆரம்பித்தது.

TN Job “FB  Group” Join Now

பின்பு நாளடைவில் அனைத்து தரப்பு தொழில்களும் சிறப்பாக நடக்க துவங்கியது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் சரிவில் இருந்து மீண்டது. அதேபோல் கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் சிரமப்பட்ட தமிழகமும் தற்போது சீரான நிலைக்கு வந்துள்ளது. மேலும் தமிழகத்திலும் தற்போது அனைத்து கட்ட தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் தக்க கொரோனா பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – அரசு அறிவிப்பு!!

இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் சுமார் ரூ.7,579 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இந்த வசூல் கடந்த ஆண்டை விட சுமார் 23% அதிகமானதாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியாக ரூ.6,177 கோடி வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!