தமிழக அரசு சார்பில் பசுமை முதன்மையாளர் விருது – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்ளும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்புகள்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து 14ம் தேதி வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். ஆகஸ்ட் 23ம் தேதி முதல் துறைவாரியாக விவாதங்கள் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒரு துறையாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து இன்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அத்துறையின் அமைச்சர் வ.வீ.மெய்யநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
பட்ஜெட் விலையில் பல சிறப்பு அம்சங்களுடன் சூப்பர் போன் – இந்தியாவில் Redmi 10 Prime வெளியீடு!
- சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனைப்புடன் மற்றும் முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ‘பசுமை முதன்மையாளர் விருது’ ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும்.
- வாடகை கட்டிடத்தில் இயங்கும் பசுமைக் கட்டிடத்திற்கு 20 கோடி ரூபாய் செலவில் புதிய பசுமைக் கட்டிடம் அமைத்து தரப்படும்.
- முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
- சிறந்த சுற்றுச்சூழல் மிக்க அழகிய கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரு கடற்கரைகளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் தமிழக சுற்றுச்சூழல் துறை மூலம் கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை 32 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.
- தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களை கொண்டு பிரச்சாரம் செய்யப்படும்
- சென்னை – ஆயிரம் விளக்கு பகுதியில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும்.