CISF படையில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு – வெளியான சூப்பரான தகவல்!

0
CISF படையில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு - வெளியான சூப்பரான தகவல்!
CISF படையில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு - வெளியான சூப்பரான தகவல்!
CISF படையில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு – வெளியான சூப்பரான தகவல்!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னி வீரர்கள் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பிற துறைகளில் சேருவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அக்னி வீரர்களுக்கு CISF படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அக்னி வீரர்கள்

இந்திய நாட்டின் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட முப்படைகளில் 4 வருடம் என்ற குறுகிய கால அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ள, ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த 4 வருடத்தின் முடிவில், 25% வீரர்களுக்கு மட்டுமே மேலும் சில ஆண்டுகள் பணிபுரிவார்கள். இந்த திட்டத்தின் கீழ் 17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் பணிபுரியலாம்.

இதனால் இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு மற்ற துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஓய்வு பெற்ற அக்னி வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 300 நாட்களாக மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை – எதிர்பார்ப்பில் பொதுமக்கள்!

அதன் தொடர்ச்சியாக, தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கி உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 1968ம் ஆண்டின் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைச் சட்டத்தின் கீழ் இருக்கும் விதிகளில் மாற்றம் செய்யப்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!