தமிழக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் – அரசு எச்சரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக அரசு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கொரோனா சிகிச்சை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் வீரியத்தால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பாதிப்பின் விகிதம் சற்று குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல், மே மாதம் தான் தமிழகத்திற்கு மிக மோசமான காலம் என்று சொல்ல வேண்டும். காரணம் இரு மாதங்களும் கொரோனா நோயாளிகள் தமிழக அரசு மருத்துவமனைகளில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் அவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதற்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. பின்பு தமிழக அரசின் கடுமையான நடவடிக்கையினால் தொற்று சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்திற்கு கீழ் செலவுகள் ஏற்றுக்கொள்ளும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் – திருப்பி ஒப்படைக்கப்படும் வாகனங்கள்!
மேலும் இந்த அறிவிப்பு குறித்து தொடரப்பட்ட வழக்கில் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கு வருமான உச்ச வரம்பினை 2 மடங்காக உயர்த்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா சிகிச்சைக்காக தமிழகத்தில் கூடுதல் கட்டணம் விதிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்டது.