தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் – திருப்பி ஒப்படைக்கப்படும் வாகனங்கள்!

0
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் - திருப்பி ஒப்படைக்கப்படும் வாகனங்கள்!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் - திருப்பி ஒப்படைக்கப்படும் வாகனங்கள்!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் – திருப்பி ஒப்படைக்கப்படும் வாகனங்கள்!

திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறிய இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அவற்றை உரியவரிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது.

வாகனங்கள் ஒப்படைப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நோய் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு மு ஊரடங்கை அறிவித்தார். இதனால் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது. மக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. அரசு தடுப்பு நடவடிக்கைளை தீவிரமாக செய்து வருகிறது. மே 10 முதல் 24 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தது. அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் மட்டும் திறக்க அரசு அனுமதியளித்து. மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணிகளுக்காக போலீசார் தொற்று பரவல் காலத்திலும் பணி செய்தனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

மேலும் ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் தேவையுள்ள அவசர காரணங்களுக்கு மட்டுமே மக்கள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் பலர் ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வீதிகளிலும் சாலைகளிலும் இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்தனர். தகுந்த காரணங்கள் இல்லாததால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. இதே போல் தேவையற்ற காரணங்களுக்காக பயணம் செய்த நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி, பான் கார்டு தொலைந்து விட்டதா? பெற்றுக்கொள்ள எளிய வழிமுறை இதோ!!

இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டது. திருச்சியில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றி திரிந்தவர்களின் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி ஒப்படைக்கும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. திருச்சியில் விதிகளை மீறியதாக காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 6,566 இருசக்கர வாகனங்களும், 193 மூன்று சக்கர வாகனங்களும், 73 நான்கு சக்கர வாகனங்களும் உரியவர்களிடம் இன்று முதல் தினசரி 250 வாகனங்கள் வீதம் திருப்பி வழங்கப்படும் என அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!