நாட்டில் இழுத்து மூடப்படும் அரசு அலுவலகங்கள் – பொருளாதார நெருக்கடி எதிரொலி!
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு கடும் பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதால் தற்போது அரசு அலுவலகங்கள் கூட செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை குறித்து முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
இலங்கையின் நிலை:
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் அரசுகளுக்கு நோயை கட்டுக்குள் வைக்க வேறு வழியில்லாமல் போனது. இதனால் ஊரடங்கை கட்டாயம் அமல் படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், தொற்று பாதிப்பு நிலை மெல்ல மெல்ல குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கிய பிறகு மற்ற நாடுகள் சிறிது சிறிதாக பொருளாதாரத்தில் சீரடைய தொடங்கியது.
பிரபல சீரியல் நடிகை ரச்சித்தாவுக்கு இந்த நிலைமை? கடைசியில இருந்த ஒரு நம்பிக்கையும் போச்சே!
ஆனால், சுற்றுலாவை மட்டுமே முக்கிய வருவாயாக கொண்டு செயல்படும் இலங்கையில் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு முதல் அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் அங்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. பற்றாக்குறையின் காரணமாக அந்த பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மக்கள் அரசின் இயலாமையை காரணம் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது இலங்கையில் அரசு அலுவலங்களில் தினசரி பணிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஊழியர்களுக்கான வருவாய் அளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அரசு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை ரூ.20,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், அரசின் புதிய திட்டங்கள் மற்றும் தொடங்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கூட போதிய நிதி இல்லாமல் அரசு திண்டாடி வருகிறது. அரசு அலுவலர்களுக்கான சம்பளம் கொடுப்பதில் நெருக்கடியான நிலை நீடிப்பதால் அரசு அலுவலங்கள் மூடப்படும் நிலை இலங்கையில் வந்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்