தமிழக அரசு இ-சேவை மையங்கள் திறப்பு – பிற்பகல் வரை செயல்பட அனுமதி!
தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் 30% பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து இ – சேவை மையங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இ-சேவை மையங்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் முதல்வர் அவர்கள் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தார். இதன் காரணமாக மே 10 முதல் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் திறக்க அரசு தடை விதித்தது. அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் மட்டும் திறக்க அனுமதியளித்துள்ளது. பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் குறையாத காரணத்தால் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளும் தளர்வில்லா ஊரடங்காக அமல்படுத்தப்பட்டது.
ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் – டிஜிபி அலுவலகத்தில் மனு!!
இந்த தொடர் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதின் விளைவாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதனால் அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை போன்ற கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் 30% வரை அலுவலகத்தில் பணிபுரிய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் சுய தொழில் செய்பவர்கள் இ – பதிவு பெற்று தொழிலை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து இ-சேவை மையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று இயங்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இ-சேவை மையம் மக்களுக்கு அதிகம் பயன்படுவதால் பிற்பகல் வரை செயல்படலாம். வழக்கம் போல ஆதார் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.