ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் – டிஜிபி அலுவலகத்தில் மனு!!
தமிழகத்தில் வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி அன்று அதிமுக எம்.எல்.ஏ,கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு அனுமதி வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மனு வழங்கியுள்ளார்.
அதிமுக கூட்டம்:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முடிவுக்கு வரும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி அன்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கட்சியின் ஒதமிழகத்தில் வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி அன்று அதிமுக எம்.எல்.ஏ,கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு அனுமதி வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் மனு வழங்கியுள்ளார்.ருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது அதிமுக.,வில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற ஜூன் 14ம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் டிஜிபி அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா அவர்களின் ஆடியோ குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடாவை தேர்வு செய்ய கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.