தமிழகத்தில் 8 – 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 381 காலிப்பணியிடங்கள்!
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் உள்ள ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டென்ட், செக்யூரிட்டி பிரிவில் உள்ள 381 காலியிடங்களை நிரப்ப அரசு முன்வந்துள்ளது. விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பிரிவில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள 381 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ரெக்கார்டு கிளார்க், அசிஸ்டென்ட், செக்யூரிட்டி பணிகளுக்கு 381 காலியிடங்கள் இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் B.Sc வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேர்வுகள் எதுவும் கிடையாது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 18 அன்று நடைபெறும் நேரடி நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – இந்த தவறை செய்தால் கார்டு ரத்து!
ரெக்கார்டு கிளார்க் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் B.Sc (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம்) பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அசிஸ்டென்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் செக்யூரிட்டி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
CTET ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய தகவல்!
ரெக்கார்டு கிளார்க் பதவி, அசிஸ்டென்ட் பதவி மற்றும் செக்யூரிட்டி பதவிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.6,549 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.tncsc.tn.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று தகுதியுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். பிறகு இந்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து நேர்காணலுக்கு வரும் போது கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க வேண்டும் எனவும் வெளியாகியுள்ளது.