மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல்? அரசு திடீர் விளக்கம்! புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் குறைந்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாநில அரசு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கியுள்ளது. மேலும், இதற்கான புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்கள்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிட் -19 தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால் அரசு கடந்த ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கியுள்ளது. இதனுடன் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை முழுமையாக மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது. புதிய கோவிட் -19 தடுப்பு நிலையான பாதுகாப்பு வழிமுறைகளின் படி தொற்றுநோய்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த டிசம்பர் 27 அன்று மாநிலத்தில் முன்னதாக இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டது. தற்போதைய அறிவிப்பில், அனுமதிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!
மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடந்து வருகிறது. இதற்கான அரசின் அறிக்கையில், திங்கள்கிழமை நடந்த வாக்குப்பதிவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 65.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலில் 65.56 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஹரித்வார் மற்றும் உதம் சிங் நகர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 74.77 சதவீதம் மற்றும் 72.27 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கான முடிவுகள் மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு, பிப்.19ம் தேதி பொது விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் அப்டேட்ஸ்!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிக்கையில், ஜிம்கள், வணிக வளாகங்கள், சினிமா அரங்குகள், ஸ்பாக்கள், சலூன்கள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள் மற்றும் கூட்டங்கள் இப்போது அரங்குகள் முழு கொள்ளளவுடன் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், நீச்சல் குளங்கள் பிப்ரவரி 28 வரை மூடப்படும். அரசியல் பேரணிகள் மற்றும் தர்ணாக்கள் மீதான தடை பிப்ரவரி 28 வரை தொடரும். ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் தாபாக்கள் ஆகியவை முழு கொள்ளளவுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கோவிட் விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.