தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் இந்திய கூட்டணி அரசு மத்தியில் அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
முதல்வர் உறுதி:
இதுவரை தமிழக அரசு, அரசு ஊழியர்களின் வாழ்வில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதியும், ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான உயர்கல்விக்கான நிதியை உயர்த்துவது, ஐம்பதுக்கு வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது போன்ற அனைத்து திட்டங்களையும் தங்களின் அரசு நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் அதிரடி மாற்றம்…. அசத்தும் பள்ளி கல்வி துறை!
தற்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஒவ்வொரு முறையும் தங்களின் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தாமதம் தான் தவிர அவை நிராகரிக்கப்பட வில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தமிழ்நாட்டின் நிதி நிலை விரைவில் சரி செய்யப்படும் அதன் பின் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது உள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என , முதல்வர் உறுதி அளித்துள்ளார்.