ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் – நிறுவனத்தின் CEO வெளியிட்ட ஷாக் அறிவிப்பு!
பன்னாட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் நடப்பு மாதம் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது இது குறித்து அந்நிறுவனத்தின் CEO அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வேலை நீக்கம்:
உலகம் முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. தற்போது நிலவும் பொருளாதார வீழ்ச்சி, அதிகரிக்கும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த வேலை நீக்கம் நடைபெறுவதாக நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான சூப்பர் அறிவிப்பு.. தமிழகத்தில் 16,932 சிறப்பு பேருந்துகள்!
Follow our Instagram for more Latest Updates
மற்ற நிறுவனங்களை தொடர்ந்து பிரபல நிறுவனமான மெட்டா உள்ளிட்டவைகளும் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் மெட்டா நிறுவனம் மட்டும் சுமார் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதே போல நம்பர் 1 நிறுவனமான கூகுள் முழுநேர ஊழியர்களில் சுமார் 6 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் மந்த நிலை பொருளாதார நடவடிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிறுவனத்தின் செலவை குறைக்க ஜனவரி மாதத்தின் பாதியில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு இருக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.