பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான சூப்பர் அறிவிப்பு.. தமிழகத்தில் 16,932 சிறப்பு பேருந்துகள்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தற்போது இது தொடர்பான அறிவிப்பை போக்குவரத்தை வெளியிட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது நெருங்கி வருவதால் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்பார்கள். இதனால் பேருந்துகளில் பயணிகளுக்கிடையே கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும். இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து இன்று தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது.
தமிழகத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் ..பறிபோகும் பணம் – காவல் துறை எச்சரிக்கை!
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த ஆலோசனையின் முடிவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை போக்குவரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16, 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை தினமும் 2,100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக இந்த 3 நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் கூடுதலாக 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்தும் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போல் மற்ற பகுதிகளில் இருந்து 6,183 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.