சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு – மாலை நிலவரம்!
சென்னையில் இன்று (செப்டம்பர் 21) காலை மற்றும் மாலை விற்பனை நிலவரத்தின் படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு சராசரியாக ரூ.200 வரை உயர்வை கண்டுள்ளது. இந்த திடீர் உயர்வு வாடிக்கையாளர்களை சற்று அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
மாலை விற்பனை
முன்பெல்லாம் சவரன் கணக்கில் ஆபரணத் தங்க நகைகளை வைத்திருப்பது சமூக அந்தஸ்தின் வெளிப்பாடாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மாறிக்கொண்டிருக்கும் இந்த நவநாகரீக உலகில் ஆபரணத் தங்கம் சேர்ப்பது ஒரு முக்கிய முதலீடாக கருதப்படுகிறது. பொதுவாக தங்க நகைகளை வாங்கி சேர்ப்பதில் நம் இந்திய மக்கள் தான் ஆர்வம் செலுத்துவது வழக்கம்.
தமிழகத்தில் 2 அரசு பள்ளிகள் மூடல் – மாணவர்களுக்கு கொரோனா தொற்று எதிரொலி!
இப்படி இருக்கும் நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினசரி ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய விற்பனையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வை கண்டுள்ளது. அதாவது இன்று (செப்.21) காலை, மாலை என 2 விற்பனை நேரங்களையும் சேர்த்து சுமார் ரூ.200 வரை ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் – அக்.12 பணிகள் தொடக்கம்!
சென்னையில் இன்று மாலை துவங்கியுள்ள விற்பனையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 வரை உயர்வை கண்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் நகை சுமார் ரூ.34,968க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,373க்கு விற்பனையாகிறது. அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையும் ரூ.64.10க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.