தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விடுபட்டவர்களுக்கும் உண்டு! அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - விடுபட்டவர்களுக்கும் உண்டு! அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - விடுபட்டவர்களுக்கும் உண்டு! அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விடுபட்டவர்களுக்கும் உண்டு! அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டு உள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் விவசாயத்திற்காக பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி குறித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு மிகாமல் நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தள்ளுபடி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

இதில் போலி நகைகளை கொண்டு நகைக்கடன் பெறுவது மற்றும் ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்தது. இந்த முறைகேடுக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. அதனால் இந்த முறைகேடுகள் ஏற்படாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் குறிப்பாக தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு தகுதியான நபர்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த தள்ளுபடிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

பிப்ரவரி 17ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு திடீர் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் 13,47,033 கடன்தாரர்களில் 10,18,066 பயனாளிகள் தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதி உள்ளவர்களுக்கு அவர்களின் நகைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையிலும் பொதுமக்களின் நலன் கருதி நகைக்கடன் தள்ளுப்படி வழங்கப்பட்டு வருகிறது. நகைக்கடன் தள்ளுபடியில் தகுதி உள்ளவர்களுக்கு இன்னும் தள்ளுப்படி வழங்கப்படாமல் இருந்தால் அவர்கள் உரிய ஆதாரத்தை காண்பித்து நகைக்கடன் தள்ளுபடி பெற்று கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!