வாகன ஓட்டிகளுக்கு சரியான ஓய்வு வழங்க வேண்டும் – காவல்துறையினர் எச்சரிக்கை!
தமிழகத்தில் ஏற்படும் விபத்தினை தவிர்ப்பதற்காக வாகன ஓட்டிகளுக்கு சரியான ஓய்வு வழங்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வாகன ஓட்டிகள்:
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி செல்லும் கொண்டை ஊசி வளைவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார். இது போன்ற பெரும்பாலான விபத்துகள் ஓட்டுனரின் கவனக்குறைவாலே நடைபெறுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் மாற்றம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
இதனால், நீண்ட நாள் சுற்றுலா செல்வதற்காக அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கென தனியாக ஓய்வு வழங்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு, வாகன ஓட்டுனர்களுக்கு எந்த வித ஓய்வும் வழங்கப்படாமல் தொடர்ந்து வேலைக்கு உட்படுத்தினால் வாகன உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு சரியான ஓய்வு வழங்கினாலே விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம் எனவும் காவல்துறையினர் வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.