ஜி 20 மாநாடு: இந்த 5 இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு – புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
ஜி 20 மாநாடு: இந்த 5 இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஜி 20 மாநாடு: இந்த 5 இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஜி 20 மாநாடு: இந்த 5 இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு – புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நடப்பு ஆண்டு புதுவையில் ஜி – 20 மாநாடு நடைபெறவுள்ளது. வரும் 30ம் தேதி தொடங்கும் இம்மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு காரணமாக முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

144 தடை:

ஜி-20 மாநாட்டுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு தற்போது இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 2023 வரை இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், கருத்தரங்குகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக வரும் ஜன. 30, 31 ஆகிய 2 நாட்களும் புதுச்சேரியில் G – 20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

இவர்களின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி நகரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வரும் தலைவர்கள் சர்வதேச நகரமான ஆரோவில் பகுதியை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜன. 30 முதல் இறைச்சி கடைகள் மூடல்.. கவலையில் அசைவ பிரியர்கள் – உத்தரவை வெளியிட்ட பெங்களூரு நிர்வாகம்!!

மேலும் G – 20 மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் விடுதி உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜன.29) காலை முதல் தொடங்கும் இந்த தடை உத்தரவானது ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!