நகரம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு முக்கிய ஆலோசனை!
ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினசரி கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகி வருவதால், தற்போது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆலோசித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்று நோய் துவங்கிய 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் ஹாங்காங் நகரத்தில் தற்போது ஒமிக்ரான் பாதிப்புகள் உச்சம் கண்டு வருகிறது. அந்த வகையில் ஹாங்காங்கில் தற்போது ஒமிக்ரான் பரவலால் உருவான கொரோனா 5ம் அலைத்தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நேற்று (பிப்.28) ஒரே நாளில் ஹாங்காங்கில் மொத்தம் 34,000க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதுவும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட இந்த எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.2 லட்சம் வரை மாத சம்பளம்! மார்ச் 26ம் தேதி கடைசி நாள்!
இதற்கு முன்னதாக ஹாங்காங்கில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று நகரின் சுகாதாரப் பாதுகாப்பு மையத்தின் முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ஆல்பர்ட் ஓ கூறி இருந்தார். மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் நகரம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அரசு நிர்பந்திக்கப்பட்டு வருகிறது.
ஆனால் முழு ஊரடங்கை அமல்படுத்த விரும்பாத ஹாங்காங் அரசு, சில நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை மட்டும் தீவிரப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் மக்களை வீட்டிலேயே இருக்கச் சொல்வது, தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் துவங்கி மார்ச் மாதம் இறுதி வரை நகரம் முழுவதும் உலகளாவிய சோதனையை அறிவித்த அரசு, நகரின் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூன்று முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உக்ரைன் செல்ல காரணம் இதுதான் – முழு விவரம் இதோ!
அதே நேரத்தில் மாலை 6 மணிக்குப் பிறகு ஹோட்டல்களில் உணவு உட்கொள்ள தடை, சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் ஏப்ரல் வரை நீட்டித்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளை கொரோனா சோதனை மையங்கள், தனிமைப்படுத்தும் வசதிகள் மற்றும் தடுப்பூசி வளாகங்களாக மாற்ற அரசு முயற்சித்து வருகிறது. இதற்கிடையில் ஹாங்காங்கின் சுகாதார அமைச்சர் சோபியா சான், மக்களின் செயல்பாடுகளை குறைக்கவும், பரிசோதனை செயல்திறனை அதிகரிக்கவும், முழு ஊரடங்கை விதிக்கவும் அரசாங்கம் விவாதித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.