LIC பங்கு விற்பனை குறித்த முழு விவரங்கள் -7.75 லட்சம் கோடி இலக்கு!!
இந்தியாவின் சிறந்த காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில் மத்திய அரசின் பங்குகளை விற்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதனை பொது பங்கு வெளியீடு மூலமாக விற்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு:
கொரோனா பரவல் காரணமாக அரசின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் முதலீடுகளில் கணிசமான அளவு எல்ஐசி நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால் எல்ஐசியில் தங்களது பங்குகளை விற்க உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்துள்ளது. ஆனால் அரசு உள்கட்டமைப்பு மேம்பாடு, சமூகத்துறை மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றிற்கும் நிதி பெற எல்ஐசியை தேடி செல்கிறது.
பாங்க் ஆப் பரோடா வங்கியில் தேர்வின்றி பணி – தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
ஆனால் கொரோனா காரணமாக எல்ஐசி-யின் பங்கு விற்பனை இந்த ஆண்டு இல்லை. இது அடுத்த ஆண்டில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பின் படி, நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் எல் ஐ சி பொதுப் பங்கு வெளியீடு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டின் ஜனவரி – மார்ச் 2022 காலாண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த பங்கு வெளியீடு செய்ய பல தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறோம்.ஆனால் இதற்கான இறுதி முடிவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு செய்வார் என DIPAM அமைப்பின் செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் எல் ஐ சி பொதுப் பங்கு வெளியீடு நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இருக்கலாம். எனவும் அவர் தெரிவித்துள்ளார். பங்கு வெளியீட்டு ஏதுவாக தேவையான ஆவணங்களை பங்கு சந்தை கட்டுப்பாளரான செபியுடன் கலந்துரையாடி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசின் நிதி நெருக்கடியான நிலையில், எல்ஐசி-யின் பங்கு விற்பனை என்பது அரசின் 7.75 லட்சம் கோடி இலக்கினை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆக இந்த பங்கு வெளியீடு விரைவில் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.