நாளை முதல் ஆகஸ்ட் 1 வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
தினசரி கொரோனா பாதிப்புகளில் புதிய எழுச்சியை கண்டு வரும் கேரள மாநிலத்தில் நாளை (ஜூலை 31) முதல் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியும் அமலில் இருக்கும்.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதை அடுத்து கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம் எட்டி வருகிறது. கடந்த சில வாரங்களாக மீண்டுமாக அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்று காரணமாக தினசரி 22 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலம் தழுவிய பொது முடக்கத்தை நாளை (ஜூலை 31) மீண்டும் அமல்படுத்துவதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மேலும் கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகள் பதிவாகி வருவதால், NCDC இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கேரளா சுகாதார அமைச்சகம் கூறுகையில், கொரோனா வழக்குகளை கட்டுப்படுத்துவதை விட நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான செயல்பாடுகளில் அரசு அதிக கவனம் செலுத்துகிறதாக தெரிவித்துள்ளது.
எனினும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை குறித்து என்று கருத்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கொரோனா தடுப்பு நிர்வாகத்தில் சிறந்த நடைமுறைகளை மேற்கொண்டதற்காக பாராட்டப்பட்ட கேரளா மாநிலம், கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் உள்ள கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர் சுல்பி நூஹு கூறுகையில், ‘22,000 க்கும் மேற்பட்ட நேர்மறை வழக்குகள் ஏற்படுவதை விட மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை 1,000 லிருந்து 3,200 ஆக உயர்ந்திருப்பது கவலைக்குரியதாகும் என கூறியுள்ளார். இத்தகைய நிகழ்வுகள் காரணமாக கேரளாவில் உள்ள 31 நகராட்சி பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளையும், நாளை ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் வார இறுதி பொது முடக்கத்தையும் அரசு அமல்படுத்தியுள்ளது.