பள்ளிகளுக்கு விடுமுறை – முழு அடைப்பு போராட்டம்!
மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் நேற்றும் இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியிலும் ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு கட்சியினர் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தற்போது முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் எவைகளுக்கெல்லாம் விடுமுறை என்று விரிவாக பார்ப்போம்.
பள்ளிகளுக்கு விடுமுறை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துவது, ஊரக வேலை திட்டத்தில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, விலைவாசி உயர்வு, மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இது போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நேற்றும், இன்றும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது போன்று கடந்த ஆண்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இது தெரியாம இருக்காதீங்க!
தற்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ஏராளமானோர் பங்கு பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் நாட்டில் நேற்றும் இன்றும் வங்கி சேவைகள் உட்பட பல்வேறு சேவைகளும் பாதிக்கப்பட்டது. அத்துடன் பொதுப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள். இதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் இன்று மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு – 72 காலிப்பணியிடங்கள்
அத்துடன் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இங்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டது. மேலும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு சில அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. மேலும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கும் முழு அடைப்பு போராட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.