மிளகாய் தூள் வாங்க போறீங்களா? அப்போ இத தவறாமல் படிங்க! FSSAI முக்கிய தகவல்!
நாம் பாக்கெட்டுகளில் வாங்கும் மிளகாய் தூளின் தரத்தை அறிய செய்ய வேண்டிய சோதனை செய்முறைகளை FSSAI பகிர்ந்துள்ளது.
மிளகாய் தூள்:
இந்தியர்கள் எப்போதும் காரசாரமான உணவை தான் விரும்புவார்கள். இந்தியாவில் சமையல் என்பது ஒரு கலையாக உள்ளது. அறுசுவை உணவுகளை சமைப்பதில் இந்தியர்கள் வல்லவர்கள். நாம் உணவுகளிலும் காரத்திற்காக மிளகாய் தூள்களை பயன்படுத்துகிறோம். நம் நாட்டு உணவு முதல் வெளிநாட்டு உணவு வகை பாஸ்தா, பீட்சா போன்ற உணவுகளிலும் கூட மிளகாய்த் தூளை நாம் சேர்க்கிறோம். ஆரம்ப காலத்தில் மிளகாய்த் தூளை பக்குவமாக வீட்டில் தயார் செய்வர்.
தமிழக அரசு சார்பில் ஆன்லைன் மூலம் சாதி சான்றிதழ் – நீதிமன்றத்தில் விளக்கம்!
ஆனால் இப்போதெல்லாம் காலம் மாறி விட்டது. எல்லா பொருட்களும் பாக்கெட்களில் வந்து விட்டது. வளர்ந்து வரும் நவீன உலகில் இல்லத்தரசிகளுக்கு வீட்டில் மிளகாய் தூள் அரைப்பதற்கு நேரமில்லை. அனைவரும் பெரும்பாலும் கடைகளில் தான் மிளகாய் தூள் வாங்குகிறார்கள். இது எந்த அளவிற்கு தூய்மையானது என்பது தெரியவில்லை. சில நிறுவன மிளகாய் தூள்களில் செங்கல் தூள், மற்றும் கலர் பொடி போன்றவை கலக்கப்படுகிறது. இந்த நிலையில் கடைகளில் நாம் வாங்கும் மிளகாய் தூளின் தரத்தையும் அதன் தூய்மையை கண்டறிய FSSAI ஒரு சோதனைச் செய்முறையை பகிர்ந்துள்ளது.
UIDAI புதிய ஆதார் கார்டை பெறும் எளிய வழிமுறைகள் இதோ!
அதாவது ஒரு கிளாஸ் தண்ணீரில் மிளகாய் தூளை சேர்த்து அதை ஸ்பூன் கொண்டு கலக்க வேண்டும் பின் அந்த நீரை கைகளில் சிறிது எடுத்து தேய்த்து பாருங்கள். அதில் சொரசொரப்பான படிமங்கள் கிடைத்தால் அதில் செங்கல் தூள், மண் கலந்திருக்கலாம். மேலும் வழவழப்பான தன்மையை உணர்ந்தால் சோப்பு கற்கள் சேர்த்திருக்கலாம். இவ்வாறு மிளகாய் தூளை சோதனை செய்து அதன் தரத்தை அறியலாம் என்று FSSAI கூறுகிறது.