செப்.16 முதல் 16 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – கோவை மாவட்ட ஆட்சியர்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகி வரும் நிலையில், நாளை முதல் 16 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு முன்பிருந்ததை விட குறைந்து உள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தமிழகம் முழுவதும் 1,658 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு முற்றிலும் அற்ற மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. இதனால், அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
செப் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு!
மேலும், சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளையும் அளித்து உள்ளது. இந்நிலையில், மாவட்டங்களில் உள்ள பாதிப்பு நிலவரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடர்ந்து மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில், செப்டம்பர் 16ம் தேதியான நாளை முதல் 16 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இதன்படி, மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் 50% கடைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாரச் சந்தைகளுக்கும் தடை தொடரும். கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மளிகை, பாலகம், மருந்துக் கடைகளைத் தவிர பிற கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.