ஜன.23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் – சண்டிகர் & ஹரியானா பள்ளிகள் திட்டம்!

0
ஜன.23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் - சண்டிகர் & ஹரியானா பள்ளிகள் திட்டம்!
ஜன.23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் - சண்டிகர் & ஹரியானா பள்ளிகள் திட்டம்!
ஜன.23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் – சண்டிகர் & ஹரியானா பள்ளிகள் திட்டம்!

அதிக குளிர் நிலையை முன்னிட்டு சண்டிகர் மற்றும் ஹரியானா பள்ளிகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி 23ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

வட இந்திய மாநிலங்களில் நடப்பு ஆண்டில் அதிக அளவிலான குளிர் நிலவி வருகிறது. இதனால் வெப்பநிலை மிகவும் குறைந்து மக்களை குளிர் வாட்டி வருகிறது. இதற்காக பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிசம்பர் மாதத்தில் அளிக்கப்பட்டிருந்த குளிர்கால விடுமுறைகள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி, மாணவர்களின் நலன் கருதி ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டது.

உலக அளவில் கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு – WHO வெளியிட்ட ஷாக் தகவல்!

இருப்பினும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பள்ளிகள் நடந்து வந்தது. ஜனவரி 21ம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், சண்டிகர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ஜனவரி 23ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 15ம் தேதி முதலாகவே, ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 26ம் தேதி வரை இப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!