தமிழக போக்குவரத்து துறையின் புதிய திட்டம் – மாநகர பேருந்துகளில் இலவச பயணம்.. டிச.21 முதல் அமல்!
தமிழக போக்குவரத்து துறை மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு இலவச பயண டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய திட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் முறை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டம் மூலம் தற்போது ஏராளமான பெண்கள் தினந்தோறும் அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு தினசரி செலவழித்த பயணச்சீட்டு கட்டணம் சேமிக்கப்பட்டு வருவதாக பல பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து பேருந்து கட்டணமும் வெகுவாக குறைக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அரசு பேருந்து கட்டணத்தை மீண்டும் உயர்த்த உள்ளதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தது. இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு ரூ.1000.. மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள் – அடுத்த வாரம் ஜாக்பாட் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டோக்கன்கள் மூலம் மூத்த குடிமக்கள் 6 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் அரசு நகர பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டோக்கன் வரும் டிசம்பர் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.