தமிழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான இலவச பாடப்புத்தகம் – பணிகள் மீண்டும் துவக்கம்!
தமிழகத்தில் ஜூன் 14 முதல் புதிய கல்வியாண்டுக்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் மாவட்டங்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு பள்ளிகளுக்கு இன்று முதல் பாடபுத்தகம் கொண்டு செல்லும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இலவச பாடப்புத்தகம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாத காரணத்தால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2021-22 கல்வியாண்டு ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Multi Device Support அப்டேட்!
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அரசுப்பள்ளி மாணவரக்ளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
2021-22 கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்திற்கு அனைத்து பாடப்புத்தகங்களும் இன்று முதல் கொண்டு செல்லும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே மதுரை மாவட்டத்திலுள்ள, மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனங்கள் மூலமாக பாடப்புத்தகங்கள் ஏற்றி செல்லும் பணி நடைபெற்று வருகிறது.