10 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – மே 5 முதல் இலவச டேப்லெட் வழங்கல்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் இலவச டேப்லெட்டுகளை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.
இலவச டேப்லெட்
ஹரியானா அரசு, 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மே 5 முதல் இலவச டேப்லெட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மே 5 முதல் இலவச டேப்லெட்டுகள் வழங்கப்படும். இந்த இலவச டேப்லெட் சாதனங்களில் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் தகவமைப்பு கற்றல் மென்பொருளுடன் கூடிய உள்ளடக்கம் இருக்கும். மேலும் 5 லட்சம் தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவச இணையத் தரவும் வழங்கப்படும்.
பத்ரிநாத் & கேதார்நாத் செல்ல விரும்புபவர்கள் கவனத்திற்கு – டூர் பேக்கேஜ் அறிமுகம்! முழு விவரம் இதோ!
அதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ பிரச்சாரத்தை ஹரியானா முதல்வரின் தலைமையின் கீழ் முன்னெடுத்துச் செல்லும் வகையில் பள்ளிகளில் படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு டேப்லெட் மற்றும் இலவச டேட்டாவை வழங்க உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இப்போது மாநில அரசின் இந்த லட்சியத் திட்டத்திற்கு ‘இ-லெர்னிங்–அட்வான்ஸ் டிஜிட்டல் ஹரியானா முன்முயற்சியுடன் கூடிய அடாப்டிவ் மாட்யூல்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது டேப்லெட் வழங்கும் விழா மே 5ம் தேதி ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் தாகூர் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் என்றும் இதில் முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இது குறித்த அறிக்கையின்படி, இந்த லட்சிய திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் டேப்லெட்கள், 2ஜிபி இலவச டேட்டா மற்றும் பிஏஎல் (தனிப்பயனாக்கப்பட்ட அடாப்டிவ் லேர்னிங்) தளம் ஆகியவை வழங்கப்படுகிறது. தவிர இந்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து 33,000 முதுகலை பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் இலவச டேப்லெட் வழங்கப்பட இருக்கிறது. இதனுடன் மற்ற 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட்கள் வழங்குவதற்கு படிப்படியாக ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.