ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – 2022 மே 31 வரை இலவச திட்டம் நீட்டிப்பு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - 2022 மே 31 வரை இலவச திட்டம் நீட்டிப்பு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - 2022 மே 31 வரை இலவச திட்டம் நீட்டிப்பு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – 2022 மே 31 வரை இலவச திட்டம் நீட்டிப்பு!

கொரோனா பரவல் காரணமாக மக்கள் மிகவும் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்தனர். இதன் காரணமாக அரசாங்கம் ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்களை வழங்கி வந்தது. இத்திட்டத்தை பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பை டெல்லி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலவச ரேஷன் திட்டம்

முதன்முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் மக்கள் மிகவும் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் இருந்தனர். அதனால் அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தது. இதனை தொடர்ந்து டெல்லியில் இலவச பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்கி வந்தனர்.

மாநில அரசு ஊழியர்கள் சம்பளம் பெற இனி ‘இது’ கட்டாயம் – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

இதனால் கொரோனா காலத்திலும் மக்களுக்கு முறையான உணவு கிடைத்தது. தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ நவ.24 தேதி அன்று கண்டறியப்பட்டது. மேலும் டெல்டா வகை வைரஸை விட மிகவும் வேகமாக பரவ கூடியதாக உள்ளது. இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PGTRB, SSC, TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள்!

இதையடுத்து டெல்லி அரசாங்கம் ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. 72.77 லட்சம் பேர் இத்திட்டம் மூலமாக பயன் பெறுகின்றனர். மேலும் புலம்பெயர்ந்த மக்கள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி இலவச உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4 கிலோ கோதுமையும், 1 கிலோ அரிசியும் இத்திட்டம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!