ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை விநியோகம் – ஏற்பாடுகள் தீவிரம்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை விநியோகம் - ஏற்பாடுகள் தீவிரம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை விநியோகம் - ஏற்பாடுகள் தீவிரம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை விநியோகம் – ஏற்பாடுகள் தீவிரம்!

தற்போது புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளன. முதலில் அறிவித்த தீபாவளி பண்டிகைக்கான இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலவச அரிசி, சர்க்கரை விநியோகம்

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக புதுச்சேரியில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, இலவச அரிசிக்கான பணம் நேரடியாக ரேஷன்கார்டு அட்டைதார்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது புதுச்சேரியில் கூட்டுறவு சங்கம் மூலம் 323 ரேஷன் கடைகள், பாப்ஸ்கோ மூலம் 35, தனியார் மூலம் 25 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதனை தொடர்ந்து காரைக்காலில் 70 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் அனைத்து ரேஷன் கடைகளும் ஊரடங்கு விதி முறைப்படி மூடப்பட்டன. புதுச்சேரியில் 600 பேர், காரைக்காலில் 70 பேர் என மொத்தம் 670 பேர் ரேஷன் கடைகளில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? முக்கிய வலியுறுத்தல்!

அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க, அரசு அளிக்கும் கமிஷன் தொகை, மத்திய அரசின் மானியம் சேர்த்து தான் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கடை வாடகை வழங்கப்பட்டு வந்தது. ஊரடங்கு விதி முறைகளால் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. மேலும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.

டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அதனை தொடர்ந்து தீபாவளிக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது ஒருவழியாக இலவச அரிசி, சர்க்கரை வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன் விளைவாக சர்க்கரை, அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதனால் ஓரிரு நாட்களில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட உள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!