தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? முக்கிய வலியுறுத்தல்!
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத் திட்டம்:
2003 ம் ஆண்டு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது. அதன்படி இனி ஓய்வூதியம் கிடையாது. பணி காலத்தில் பிடித்தம் செய்த தொகை மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போது முக ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார்.
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு – மத்திய அரசு விளக்கம்!
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த இதுவரை எந்த அறிவிப்புகளும் வரவில்லை என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் சண்முகநாததுரை தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இந்த மாநாட்டில் திமுக அரசு வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.