தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலவச மின் இணைப்பு:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு மின்சார துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என திமுக அரசு தேர்தலின் போது வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் மாவட்டங்கள் தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மின் தொடர்பான புகார்களை அளிக்க உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் 2 நாட்களில் மின் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1 முதல் 18 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு, 4ம் கட்ட தளர்வுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
அதனை தொடர்ந்து விவசாயிகள் தங்களுக்கு இலவச மின் இணைப்பு வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். விவசாயம் தமிழகத்தின் முதுகெலும்பாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகளின் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது. மத்திய அரசின் புதிய விதிமுறைகளால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்த புதிய திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் . மேலும் விவசாயிகளின் நலன் கருதி திமுக அரசு செயல்படும் என தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் திமுக அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகள் மின் கட்டணமின்றி மோட்டார்களை இயக்கலாம், பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் விவசாயிகளுக்கு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்