சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு இலவச அனுமதி – மத்திய அரசின் புதிய விதிமுறை!!
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் வாகனங்களுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுங்கச் சாவடிகள்:
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பல சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனங்களுக்கும் குறிப்பிட்ட அளவு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்து கிடக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
இதனால் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் முறையை பயன்படுத்தும்படிக்கு மத்திய அரசு வலியுறுத்தி, அவை நடைமுறையிலும் உள்ளது. இருந்தாலும் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தற்போது வரை நீடித்துள்ளது. இதன் காரணமாக மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!!
அதன்படி ஒவ்வொரு சுங்கச் சாவடியின் இரு வழிகளிலும், 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் நிறத்தில் ஒரு கோடு போடப்பட்டிருக்க வேண்டும். இப்போது சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த வரும் வாகனங்கள், மஞ்சள் நிற கோட்டை தாண்டி நீண்ட வரிசையில் காத்திருந்தால் அந்த வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா ஒரே நாடு ஒரே சட்டம் என்றநிலையிலும் அனைத்து வாகனங்களும் சாலையில் கட்டி ரோயட்டில் ஓடுகின்றன என்றநிலையிலும் அனைத்து சுங்க வரி வசூல் செய்யும் சுங்கசாவடிகளையும் அரசு நீக்கிவிடவேண்டும்.
இந்தியா ஒரே நாடு ஒரே சட்டம் என்றநிலையிலும் அனைத்து வாகனங்களும் சாலைவரி கட்டி ரோட்டில் ஓடுகின்றன என்றநிலையிலும் அனைத்து சுங்க வரி வசூல் செய்யும் சுங்கசாவடிகளையும் அரசு நீக்கிவிடவேண்டும்.
Reply