ஆதார் கார்டு மூலம் பணம் சம்பாரிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – சூப்பர் வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ஆதார் அட்டை வழங்கும் உரிமையை நாம் பெறலாம். அதற்கு மேற்பார்வையாளர் அல்லது ஆபரேட்டரின் UIDAI சான்றிதழின் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இப்பதிவில் ஆதார் அட்டை வழங்க உரிமம் பெறும் முறைகள் குறித்து பார்ப்போம்.
ஆதார் அட்டை:
இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. ஆதார் கார்டு என்பது 12 இலக்க எண் கொண்ட அடையாள அட்டையாகும். தற்போது அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனை, சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல் போன்ற அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாகிறது. இந்த ஆதார் அமைப்பு ஆன்லைன் மூலம் தேவைக்கேற்ப விவரங்களை மாற்றி கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் ஆன்லைன் மூலம் புதிய ஆதார் அட்டையும் பெற்றுக்கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் இந்திய ஆதார் ஆணையம் (UIDAI) பதிவாளர்களை நியமித்து வருகிறது. இந்த பதிவாளர்களால் நியமிக்கப்படுவதற்கு, பதிவு முகமைகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதில் நியமிக்கப்படுபவர்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தேவைகளுக்கு ஏற்ப குடியிருப்பாளர்களின் பயோமெட்ரிக் மற்றும் மக்கள் தொகை தரவுகளை சேகரிக்கும் பணியை மேற்கொள்வர். மேலும் இந்த ஏஜென்சிகள் உண்மையான பதிவு செய்பவர்களுக்கு அல்லது உரிமையாளர்களுக்கு ஆபரேட்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை வழங்குகின்றன.
வங்கியில் வேலை தேடுபவரா? – இதோ உங்களுக்கான HDFC வங்கி வேலைவாய்ப்பு..!
ஆதார் அட்டை வழங்கும் உரிமையைப் பெற முதலில் UIDAI சான்றிதழின் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றதும், ஆதார் பதிவு மற்றும் ஆதார் பயோமெட்ரிக்கை சரிபார்க்கும் அங்கீகாரத்தை பெறுவார்கள். இது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்ட சேவை வழங்கல் புள்ளிகளைக் கொண்டுள்ளது. இது அரசாங்க அங்கீகாரம் பெற்ற மையத்தை விரும்பினால், உங்களுக்கு CSC பதிவு தேவைப்படும். இந்த CSC க்கு பதிவு செய்ய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்ய வேண்டும். இப்படிவத்தை நிரப்ப UIDAI இணையதளத்தில் CSC என்பதைக் கிளிக் செய்து ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும். பிறகு ஆதார் அட்டை வழங்கும் உரிமையை பெறலாம்.