மதுரை சித்திரை திருவிழாவில் உணவு வழங்குவதற்கு உணவுப் பாதுகாப்புத் துறை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா:
மதுரை கள்ளழகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில்களை சித்திரை திருவிழா ஆனது மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் ஆகும். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை பார்ப்பதற்காகவே பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் மதுரைக்கு வருவார்கள். பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
Repco Micro Finance நிறுவனத்தில் வேலை – 13 லட்சம் ஊதியம் || பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
மீனாட்சி அம்மன் தேரோட்டத்தின்போது மாசி வீதியில் பக்தர்களுக்கு உணவு, நீர்மோர் வழங்கப்படும். தற்போது உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெற்றால் மட்டுமே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முடியும். பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், உணவுகள், குளிர்பானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் செயற்கை சாயங்கள் சேர்க்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.