தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உணவுத்துறை சுற்றறிக்கை வெளியீடு!
அனைத்து ஏழை எளிய மக்களும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன் பெற வேண்டும் என்கிற நோக்கில் கைரேகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது இந்த கைரேகை இயந்திரம் பழுதடைந்து கொண்டிருப்பதால் விரைவில் சரிபடுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாட தேவை பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்கிற நோக்கில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்தல் என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி – சட்டப்பேரவையில் அமைச்சர் உரை!
ஆனால் இந்த கைரேகை இயந்திரம் அடிக்கடி பழுதாவதாலும், வயதானவர்களின் கைரேகை பதியாத காரணத்தினாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாத சூழல் ஏற்பட்டது. மேலும், ரேஷன் கடைகளுக்கு வந்தவர்களை திருப்பி அனுப்பும் சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் இத்தகைய பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த கைரேகை இயந்திரத்தை சரிசெய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது.
அதாவது இது தொடர்புடைய நிறுவனமான (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின்) – (Unique Identification Authority of India – UIDAI) உயர் நிறுவனம் தகுந்த நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது. கைரேகை பதியவில்லை என்பதால் பிராக்சி முறையில் மக்களுக்கு நேரடியாகவே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விரைவில் இந்த கைரேகை தொடர்பான பிரச்சனை நிவர்த்தி செய்யப்படும் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.