சென்னையில் பரவும் ப்ளூ காய்ச்சல் – அச்சத்தில் மக்கள்.. மருத்துவர்கள் விளக்கம்!!

0
சென்னையில் பரவும் ப்ளூ காய்ச்சல் - அச்சத்தில் மக்கள்.. மருத்துவர்கள் விளக்கம்!!
சென்னையில் பரவும் ப்ளூ காய்ச்சல் - அச்சத்தில் மக்கள்.. மருத்துவர்கள் விளக்கம்!!
சென்னையில் பரவும் ப்ளூ காய்ச்சல் – அச்சத்தில் மக்கள்.. மருத்துவர்கள் விளக்கம்!!

சென்னை மக்களுக்கு அதிக அளவில் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. இது எந்த வகை ப்ளூ காய்ச்சல் என்பது இன்னும் தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த காய்ச்சல் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்கிறார்கள்.

ப்ளூ காய்ச்சல்:

தமிழகத்தில் தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை அனைவரும் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் தொண்டை புண், சளி, காய்ச்சல், உடல் வலி, இருமல் உள்ளிட்ட தொந்தரவுகள் அதிக அளவில் ஏற்படுகிறது. இவை ப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் மருத்துவத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பரவி ப்ளூ வைரசால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதில் இன்ப்ளூயன்ஸா ஏ, எச்1என்1 வைரஸ் போன்ற பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ் பரவலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இக்காய்ச்சல் குறித்து பேசிய மருத்துவர்கள் ப்ளூ பாதிப்பு அதிகம் இருந்தாலும் தீவிரம் இல்லை. தற்போது பரவும் ப்ளூ காய்ச்சலானது 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறுகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!